Sunday, March 14, 2010

எல்லாரும் எல்லாமும் பெற்று எல்லாரும் வாழும் சமுதாயத்திலே மாறாத சுவர்க்கம் தொடருமடா!,

கல்லில் பிறக்கும், கதிர் மணியடா!; காதலி
சொல்லில் பிறக்கும் இன்பமடா-எல்லாரும் எல்லாமும் பெற்று
எல்லாரும் வாழும் சமுதாயத்திலே மாறாத சுவர்க்கம் தொடருமடா!,
இல்லாமை இல்லாத தேசத்திலே என்னாளும் துன்பமென்பது இல்லையடா!

எந்த இடத்தில் எதுபிறக்கும் யார் அறிவாரோ?

எந்த இடத்தில் எதுபிறக்கும் யார் அறிவாரோ?
கள்ளிவயிற்றிலும் அகிலும் பிறக்குமடா!; மான்தனிலும்
ஒளியழகாம் அரிதாரமும் தோன்றுமடா; விலைமதிப்பில்லாத முத்தும் கடலுள்
உருவாகுமடா! எந்த இடத்தில் எதுபிறக்கும் யார் அறிவாரோ?

Tuesday, January 5, 2010

பாலசந்திரன்/கவிதை/காதல்/தத்துவம்/

தேனே வந்தேனே !- மானே உனக்கே எனது அன்பினை
தந்தேனே! விண்மீனே என்னை நானே உந்தனுக்கே ஈந்தேனே!
செந்தேனே க்ண்மீனே மண்வானே வான்மண்ணே வான்பெண்ணே!
எந்தேனே பொன்மானே தேன்கண்ணே கண் தேனே வான்தேனே!