Thursday, October 23, 2014

பூமி கூட பொறுமைதனை இழந்துவிடும-ஒருபோதும்
தாய்மையது பொறுமைதனை இழப்பதில்லை
சாமியென்று கூறுகின்ற ஒன்றுகூட
சோம்பேறிக்கு ஒருபோதும் துணை நிற்பதில்லை

Saturday, August 27, 2011

காதலியே! சுத்த வேதாந்த மெளனமே!- நீயென்
சித்த சித்தாந்த ராசியமே!-அன்பு
நித்த நாதாந்த அனுபவமே!-

என்றும் நீயென் வாழ்வின்
புத்த புதிதான புத்தகமே!
ஏகமோ?இல்லை அநேகமோ?
இயற்கையோ? இல்லை செயற்கையோ?-சித்தோ/
தேகமோ? பொதுவோ?தனிமையோ?
சிறப்பதோ?பெண்ணே!

காதலின்மெய்யன்பே!

பூமண மாமனம் பூரண மனங்கொள்ள
பொன்மனம் தருங்குணம் பூமகள் தினம்வரும்
தேன்மலர்த் தோழியே!

சோதியாய் என்னுள்ளம் சூழ்ந்த மெய்ச்சுடரே!-இதய
உள்ளொளி ஓங்கிட-அன்பு
உயிரொளி விளங்கிட
கண்விழி காட்டிய
காதலின்மெய்யன்பே!

Sunday, March 14, 2010

எல்லாரும் எல்லாமும் பெற்று எல்லாரும் வாழும் சமுதாயத்திலே மாறாத சுவர்க்கம் தொடருமடா!,

கல்லில் பிறக்கும், கதிர் மணியடா!; காதலி
சொல்லில் பிறக்கும் இன்பமடா-எல்லாரும் எல்லாமும் பெற்று
எல்லாரும் வாழும் சமுதாயத்திலே மாறாத சுவர்க்கம் தொடருமடா!,
இல்லாமை இல்லாத தேசத்திலே என்னாளும் துன்பமென்பது இல்லையடா!

எந்த இடத்தில் எதுபிறக்கும் யார் அறிவாரோ?

எந்த இடத்தில் எதுபிறக்கும் யார் அறிவாரோ?
கள்ளிவயிற்றிலும் அகிலும் பிறக்குமடா!; மான்தனிலும்
ஒளியழகாம் அரிதாரமும் தோன்றுமடா; விலைமதிப்பில்லாத முத்தும் கடலுள்
உருவாகுமடா! எந்த இடத்தில் எதுபிறக்கும் யார் அறிவாரோ?

Tuesday, January 5, 2010

பாலசந்திரன்/கவிதை/காதல்/தத்துவம்/

தேனே வந்தேனே !- மானே உனக்கே எனது அன்பினை
தந்தேனே! விண்மீனே என்னை நானே உந்தனுக்கே ஈந்தேனே!
செந்தேனே க்ண்மீனே மண்வானே வான்மண்ணே வான்பெண்ணே!
எந்தேனே பொன்மானே தேன்கண்ணே கண் தேனே வான்தேனே!

Monday, November 9, 2009

காதல் மொழி கண்ணதிலே சொன்னவளே! காதல் விழி நெஞ்சினில் கலந்தவளே! காதல் வழி வகுத்து தந்தவளே! காதல் ஒளியாகி சிரிப்பவளே!

காதலியே தேன்சுவையே ! கனிரசமே !
காதலியே வான்மழையே குளிர் நிலவே!
காதல் மொழி கண்ணதிலே சொன்னவளே!
காதல் விழி நெஞ்சினில் கலந்தவளே!
காதல் வழி வகுத்து தந்தவளே!
காதல் ஒளியாகி சிரிப்பவளே!
காதலியே தேன்சுவையே ! கனிரசமே !
காதலியே வான்மழையே குளிர் நிலவே!