கல்லில் பிறக்கும், கதிர் மணியடா!; காதலி சொல்லில் பிறக்கும் இன்பமடா-எல்லாரும் எல்லாமும் பெற்று எல்லாரும் வாழும் சமுதாயத்திலே மாறாத சுவர்க்கம் தொடருமடா!, இல்லாமை இல்லாத தேசத்திலே என்னாளும் துன்பமென்பது இல்லையடா!
எந்த இடத்தில் எதுபிறக்கும் யார் அறிவாரோ? கள்ளிவயிற்றிலும் அகிலும் பிறக்குமடா!; மான்தனிலும் ஒளியழகாம் அரிதாரமும் தோன்றுமடா; விலைமதிப்பில்லாத முத்தும் கடலுள் உருவாகுமடா! எந்த இடத்தில் எதுபிறக்கும் யார் அறிவாரோ?