மனிதராலே முடியாதது என்பது எதுவும் இல்லையடா!
மனிதராலே முடியாது என்று சொல்வதெல்லாமே!=இந்த
மன்பதை உலகினிலே முட்டாள்களின் உளறலடா!
விரக்திகொண்டு வீதியிலே தாழ்ந்து கிடப்பதுவும் ~விதியை எண்ணி
வீணராக வீழ்ந்து கிடப்பதுவும்!
வீண்பேச்சினிலே காலத்தைக் கடத்துவதும் -திகிலாய்
வாழ்வினை எண்ணி அனுதினமும் கோழையாவதும்=பயத்தாலே
மேதினியில் நாளும் செத்துசெத்துப் பிழைப்பதுவும் !இல்லாமலே!~
நம்பிக்கையாலே நாளும் பொழுதும் முயற்சியோடு! விழித்திடவேண்டும்!எழுந்திடவேண்டும்
வாழ்ந்திடவேண்டும் உயர்ந்திடவேண்டும் இந்த பூமிப்பந்தினிலே!
No comments:
Post a Comment