Monday, October 5, 2009

நீயும் புதிய பண்பாட்டை நிர்மாணிப்பவன் அல்லவா? நீயொரு நல்ல மக்கள் ஜன நாயகவாதி மட்டுமல்ல செயல்தீரனல்லவா?

நீமக்கள் கலைப் படைப்பாளியா? அவ்வாறென்றாலே!
நீயொன்றும் தனிமனிதனல்லவே!
நீயொரு நல்ல மனித நேயனல்லவா?
நீயொரு மெய்யியலின் சார்பாளனல்லவா?
நீயொரு சமத்துவச் சிந்தனையாளனல்லவா?
நீயொரு நல்ல நண்பனல்லவா?
நீயொரு நல்ல பண்பாளனல்லவா?
நீயும் மக்களுக்கு எளியனல்லவா?
நீயொரு தன்னலமற்ற மாமனிதனல்லவா?
நீயுன்னை முன்னிறுத்தாத கடைமையாளன் அல்லவா?
நீயும் புதிய சமுதாயத்தை உருவாக்குபவனல்லவா?
நீயும் அடிமையற்ற பொன்னுலகினைப் படைப்பவனல்லவா?
நீயும் புதிய பண்பாட்டை நிர்மாணிப்பவன் அல்லவா?
நீயொரு நல்ல மக்கள் ஜன நாயகவாதி மட்டுமல்ல செயல்தீரனல்லவா?
நீயொரு நல்ல உனது எழுத்துக்களால் முனைந்து நிற்கும் செயல்வீரனல்லவா?

No comments:

Post a Comment